 |
| https://www.facebook.com/photo.php?fbid=721031711274095&set=a.186048768105728.38421.100001018193852&type=1&theater |
நண்பர்களின் கவனத்திற்கு ,
வரைய வேண்டும் என்ற ஆசையில் நானும் பல படங்கள் வரைந்தேன்
( லைசென்ஸ் வாங்காமல் ரூல்ஸ் தெரியாமல் டிரைவர் வண்டி வோட்டுவது போல ).
என்னுடைய படங்களை FACEBOOK கில் பார்த்த நண்பர் ஓவியக்கலையில் 50 வருடங்கள் குறையாமல் அனுபவம் உள்ள நண்பர் ஆர்டிஸ்ட் திரு .அர்ஜுன் கலைசெல்வம் ( klick me ) அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து என்படங்களை பார்த்துவிட்டு சின்ன சின்ன திருத்தங்கள் செய்தால் உங்கள் படங்கள் இன்னும் அருமையாக வரும் என்று குறைந்த பட்சம் ஒரே ஒரு மணி நேரத்தில் பல்வேறு வகையான TIPS களை ( கண்கள் ,உதடு , ஓளி , SHADE ,etc .. ) அளித்தார் .
அவைகளில் மிகவும் முக்கியமானது கண்கள் .
அவரது டிப்ஸ் பயன்படுத்தாமல் என்படம் எப்படி என்று பாருங்கள்
அவரது டிப்ஸ் பயன்படுத்திய பின்னர் என்படம் பாருங்கள்
வித்தியாசம் தெரிகிறதா
குரு இல்லாமல் எந்த ஒரு தொழில் கற்றாலும் நாம் கற்று கொள்ளவும் , வரும் தவறுகளை திருத்தி கொள்ளவும் பல நாட்கள் ஆகும் என்பதை முழுமையாக உணர்ந்து இந்த பதிவை வெளியிடுகிறேன் .
நன்றி ....
பின் குறிப்பு ::
அவர் நிறைய டிப்ஸ்கள் அளித்தார் .
அதில் ஒன்றை மட்டுமே நான் சொல்லிருக்கிறேன் .
***இன்னும் நான் நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும் . இந்த ஓவியம் என்னும் கடலில் குளிக்க குளிக்க நிறைய முத்துக்கள் எடுக்கலாம் ****