தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 23-02-2016
J.JAYALALITHAA
நாளை ( 24-02-2016 ) பிறந்தநாள் காணும்
மாண்புமிகு முதலமைச்சர் புரட்சி தலைவி
அம்மா அவர்களுக்கு நான் வரைந்த பென்சில்
ஓவியத்துடன் வணக்கங்கள்....
““”பெண்கள் நம் பாரத நாட்டின் கண்கள்”””
![]() |
| J.JAYALALITHAA |
இரண்டு இலைகள் இணைந்தால்
சுட்டெரிக்கும்
சூரியனே மறைந்துபோகும் ....
இரண்டு கைகள் இணைந்து உயர்ந்தால்
அங்கே
மரியாதை உருவாகும்....
இரண்டு கைகள் குலுக்கினால்
அங்கே
நல்ல நட்பு உருவாகும்....
இரண்டு உள்ளங்கை தாழ்ந்தால்
அங்கே
வள்ளல் குணம் உருவாகும்...
இரண்டு இதழ்கள் சேர்ந்துமீண்டால்
அங்கே
இனிய வார்த்தைகள் உண்டாகும் ...
இரண்டு மேகம் இணைந்தால்
அங்கே
இடியும் மழையும் உருவாகும் ...
இரண்டு இதயங்கள் இணைந்தால்
அங்கே
காவியக் காதல் உருவாகும் ....
ஆணும் பெண்ணும் இணைந்தால்
அங்கே
நல்ல குடும்பம் உருவாகும்....
இரண்டு கண்களால் பார்த்தால்
அங்கே
பார்வை தெளிவாகும்....
இரண்டு விரல்கள் இணைந்தால்
அங்கே
வெற்றி சின்னம் உருவாகும் ...
இலைகள் இணைந்து அசைந்தால்
அங்கே
தென்றல் காற்று உருவாகும்....
![]() |
| J.JAYALALITHAA |


No comments:
Post a Comment